வெள்ளி, அக்டோபர் 28, 2011

கண்ணாமூச்சி

சொற்களை
அழைத்துக் கொண்டிருந்தது
கவிதை...
மரவட்டையாக 
நீளும் குச்சியறிந்து
சுருண்டு சுருண்டு 
திரும்பிக் கொண்டிருக்கின்றன 
சொற்கள்..

காற்றில் 
அலைந்து திரிந்து 
சொற்களைத் துரத்தியது 
கவிதை..
பொறியை அறிந்த
எலிக்குஞ்சுகளாகி
கீச் கீச்சென
ஓடி ஒளிந்தன சொற்கள்..

தோல்வியை அந்த ஒலி
எதிரொலிப்பதாக 
துயரப்பட்டது கவிதை..

குழலூதும் பிடாரனாகி
சொற்களைத்
தன பின்னே தொடரச் 
செய்வதான 
சுகமான கற்பனையில் 
தூங்கிப்போனது கவிதை...

தொந்தரவின்றி 
சொற்கள் 
அலைந்து ...திரிந்து...
மிதந்து...பரவி... 
   

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...