புதன், அக்டோபர் 12, 2011

வறுமைக்கோடு


உழைக்கத் தெரியாதவனும்
பிழைக்கத் தெரியாதவனும்
கரைக்கும் அப்பால்
கடக்க முடியாத வெள்ளத்தை
கண்டு கொண்டிருப்பதாக

தொலை நோக்கியால்
உற்றுப்  பார்த்தவர்
உரைத்தார்...

அது
கட்டிய கரையல்ல ...
தேசத் துகிலில்
ஒட்டிய அழுக்கென்று
தொலைநோக்கி
பாவம்...
காட்டவில்லை!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...