ஞாயிறு, அக்டோபர் 16, 2011

உரையாடலின் பின்னே 


பேசுகிறாய் ...
பேசத்தெரியும்
என நிரூபிக்க...
படித்திருக்கிறாய்
பார்த்திருக்கிறாய்
கேட்டிருக்கிறாய்
யோசிக்கிறாய்
கண்டுபிடிக்கிறாய்
நுண் உணர்வு
முன்யோசனை
புத்திசாலித்தனம்
பெருமை
சாமர்த்தியம் ...
சகலமும் உணர்த்த
நீ பேசிக்கொண்டேயிருக்கிறாய்


என்னைச்சுற்றி 
இறைந்து கிடக்கும் 
வார்த்தைச் சில்லுகள் 
(சமயத்தில் என்முகமும்
காட்டுகின்றன)
கிழிக்காமல் 
கடந்து போவதெப்படி.. 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...