வெள்ளி, அக்டோபர் 14, 2011

யாருக்காக....

வினோத வகைகளோடு
பார்த்துப் பார்த்து 
பதார்த்தப்பட்டியல் 

எதிரொலிக்கும் அரங்கிலும் 
இசைநிகழ்ச்சி கட்டாயம்
குதிரையோ ,யானையோ
ஊர்வலத்துக்கு அவசியம்!
வண்ண விளக்கு
வாணவேடிக்கை 
பன்னீர் யந்திரம் 
பந்தல் புதுமை
பந்தியில் புதுமை
எங்கு பார்த்ததையும்
ஒன்று சேர்ந்தொரு
கனவுத் திட்டத்தில்
கல்யாணம்!

செலவுக்காரன்
கலக்கத்தில்...
வரவுக்காரன்
கணக்கில்..
வந்தவர்
கடமையில்....

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...