வெள்ளி, அக்டோபர் 28, 2011

மழையின் அனல்மூச்சு...

விழும் துளிகளை
வணங்கி வணங்கி
வரவேற்க
மண்  புன்னகைத்தது ...
கோபாலன் குடையின்
மேலிருந்து
வழிந்து சொட்டிய
துளிகளை
உள்ளங்கையில் ஏந்திடக்
கிளை விரித்துக் காத்திருந்தன
நெடிய மரங்கள்...
செம்புலமில்லாது
விரியும் பிளாஸ்டிக்
தாண்டமுடியாது
தகிக்கும்
மழையின் அனல்மூச்சு  

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...