புதன், நவம்பர் 30, 2011

மஞ்சள் செம்பருத்தி 


அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்....

மஞ்சளாய்ப் பூத்தாலும் 
மஞ்சள் செம்பருத்தி 
என்று அழைப்பது போல்...
                                           *   *************
பசித்த வயிற்றின்
எரிச்சல் உணராதவனும்
ஆடைக்கிழிசலின் 
அவமானம் உணராதவனும் 
ஏக்க விழிக் குழந்தையின் 
சடைத்தலைக்கு 
சலிப்பவனுமான 
அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்...... 
        

2 கருத்துகள்:

ராம்கோபால் சொன்னது…

இது ரொம்ப நல்லாயிருக்கே. ஆம், சமூகத்தில் கடைநிலையில் இருப்போரும், ஏன் மனநிலை பிறழ்ந்தவரும் கூட மனிதர் தான் என்பதை நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள வேண்டும்.

உமா மோகன் சொன்னது…

nandri varugaikkum pathivukkum...
ithu eppadi irukku@

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...