பேபியக்கா
தைத்துவிடும் தாழம்பூச்சடை
இந்நாளின் எழிலரசி
தைத்துவிடும் தாழம்பூச்சடை
பின்னல் பிரிக்காது
ஓசிக்குஞ்சல உலா...
யார்வீட்டுப்பெண்
சடங்கானாலும்
வெளியில் வரும்
கெம்புக்கல் திருகுப்பூ ...
குத்துககாலுக்குள்
மடக்கி இழுக்கும்
ஈருளியில் எரிச்சலாகி
பேன்குத்தும் தாலாட்டில்
செருகும் கண்கள் ...
ஏழுவீட்டுக் கூரையும்
கட்டெறும்பும்
சேர்த்தரைத்த மருதாணி...
************
எந்த வரியும்
புரியாது விழிக்கிறாள்இந்நாளின் எழிலரசி