சனி, டிசம்பர் 17, 2011



ஈரமான ஆரம்

புது மருமகள்
நகைப்பெட்டி நனைந்தது
போலிருந்தது ....
தன குடும்பத்தின் வியர்வையும்
கண்ணீரும்
இப்படித்தான் - விடாது
சுரப்பதாக சொன்னாள்...
தனித்தனி அடையாளம்
இல்லாவிடினும்
ஒவ்வொன்றுக்குள்ளும்
அவர்கள்
உண்ணாத பண்டங்கள்
உடுத்தாத துணிவகைகள்
போகாத சுற்றுலாக்கள்
கிராம்
கிராமாய்க்  குடியிருந்து
குரல் கொடுப்பதாகவும்
குறிப்பிட்டாள்..!
சலிப்போ
வெறுப்போ இல்லாது
ஒலித்த
அவள் குரல்தான்
உண்மையாக அச்சமூட்டியது!



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...