சனி, ஜனவரி 14, 2012

ஒளியே வாழி!

ஒளியில் தொடங்குகிறது நாள்..
ஒளியில் தொடங்குகிறது உற்சாகம் 
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில்நம்மை இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின் சக்தியை கண்டபோது ..
தொடங்கியது மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை
பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!

5 கருத்துகள்:

வலையுகம் சொன்னது…

அருமையான கவிதை

இருளில் இருந்தால் தான் ஒளியின் அவசியம் புரியும்

RANGOPAL சொன்னது…

சபாஷ், பொங்கல் தலைப்பு கவிதை. வாழ்த்துக்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

உமா மோகன் சொன்னது…

நன்றி நண்பர் ஹைதர் அலி

உமா மோகன் சொன்னது…

நன்றி நண்பர் கோபி

உமா மோகன் சொன்னது…

இந்த கவிதை தினமணி இணையத்தில் பொங்கல் மலரில் வெளியாகியுள்ளது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...