புதன், ஜனவரி 11, 2012

இப்போதும் பலிக்கவில்லை.....

தேவதைகள்
எப்படியிருப்பார்கள் ....
பாரதிராஜாவின் பாடல் போலா...
சித்திரக் கதைகளின்
சிறகுகளோடா .....
ஆடை மாற்றம்
நிகழ்ந்திருக்கலாமோ...
சலனமற்ற பார்வையா?
புன்னகைப்பது உண்டா....
அறியாமல்
தவறவிட்டு விடுவேனோ
அச்சத்தால் கேட்கிறேன்...
கேள்விகளை முடித்து
நிமிர்ந்தபோது
மேசையின் எதிர்ப்புறம்
அடையாளம் சொல்லமுடியா
நிறத்தில்
அழகிய மலர்
தேவதை வந்ததன்
அடையாளமாக...

4 கருத்துகள்:

sathguna சொன்னது…

Valamana karpanai.Asandha neraththil vandhu asaththubavaley Devathai.
Illavittal summa viduvoma avalai?-sathguna

உமா மோகன் சொன்னது…

எப்போதாவது நாம் நேரில் சந்திக்கலாம் ...ஒரு ஆசைதான்..

ramgopal சொன்னது…

தேவதைகளின் தரிசனம் மலர், குழந்தைகள், அசத்தலான காட்சி என பெரும்பாலும் வடிவங்களின் வாயிலாகவே கிடைக்கிறது. ஒருவேளை தேவதை என்பது அதுதானோ?

உமா மோகன் சொன்னது…

வடிவம் அறியாதவரைதான் சுவாரஸ்யமோ

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...