வியாழன், ஜனவரி 26, 2012

நினைவின் சரத்தில்

அந்த மனோரஞ்சிதம் 
வருடங்கள் கடந்தும்  
வாடாமல் சிரிக்கிறது !
பிரத்யேக மணமும் 
பெயரற்ற நிறமும் கூட 
மங்குவதேயில்லை...
வெல்வெட் துணியிலிட்ட 
முத்துமாலைகூட
சற்றே 
பழுத்த வெண்மையில் ...
ஆனால் 
என் ஒற்றை மனோரஞ்சிதம் 
முணுமுணுத்த பாடல் வரிகளையும் 
வெளுத்த கனவுகளையும் 
இதழ்களாய் இணைத்தபடி 
வாடாமல்....  

4 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

நினைவின் சரத்தில் நீங்காமல் வந்து போகிறது என் பசுமை நினைவுகளும் அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! நன்றி !

உமா மோகன் சொன்னது…

நன்றி நண்பரே வருகைக்கும் பதிவுக்கும்

உமா மோகன் சொன்னது…

நன்றி சசிகலா வருகைக்கும் பதிவுக்கும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...