சனி, பிப்ரவரி 18, 2012

பாலையின் அரும்பு

மருதாணிப்பூ
மணந்துகொண்டிருந்த பாதை
இன்று
வெறும் வெளிச்சம்
இறைந்து கிடக்க
வெம்மையின்
சுடுமணத்தைப்
பரப்பிக் கொண்டிருக்கிறது...
மெல்லடி வைத்துப்
பாடல் முனகியவண்ணம்
கடக்கவியலாதபடி !
கடும் முயற்சியில்
வரிகளை
நினைவில் இருத்துகிறேன்..
மருதாணிப்பூ
இல்லாவிடிலும்,
நாளை
ஒரு
சிறுமலர் -
அங்கே சிரிக்கலாம்...  

4 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

நம்பிக்கையில் நகர்கிறது வாழ்க்கைப்பயணம். கவிதை சொல்லும் கருத்து வெகுநன்று. பாராட்டுகள் சக்தி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கவிதை அருமை ! நன்றி சகோதரி !

உமா மோகன் சொன்னது…

நம்பிக்கையின் மணம் மாறலாம்
மனம் மாறாமலிருத்தல் முக்கியமல்லவா கீதா

உமா மோகன் சொன்னது…

தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...