திங்கள், மார்ச் 12, 2012

அபி உலகம் -7

அபிக்கு மிகப் பிடிக்கும்
திராட்சையோ
கல்கண்டோ
காலை மறந்தாலும்
மாலை வரை
தின்னாமல்,திட்டாமல்
ஈ ,எறும்பு,
அண்டாமல்
காத்திருக்கும்
அலமாரிப் பிள்ளையாரை!
***************************
மழைக்கால மரவட்டையின்
குறுக்கே
குச்சி நீட்டினான் ஜீவா...
சுருண்டு சுருண்டு
திரும்பிக் கொண்டது !
"நேத்து,ரயில் ஏன்
சித்தப்பா
இப்பிடித் திரும்பல...."
அபியின் கேள்வியில்
தண்டவாளத்தில்
குண்டு வைத்துத்
தகர்ந்த ரயில்
நகர்ந்து கொண்டேயிருந்தது.....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...