சனி, மார்ச் 17, 2012

விலகிய சக பயணி

பரபரப்பான                                                                                 
நகரச் சந்தடியில் தொடங்கியது ...
புறநகர்த்தனி வீடுகள்,
மிஞ்சிக் கிடந்த
வயல்பரப்பு
தொலைதூரச் சிறுமுகடு
தப்பிய மரக்கூட்டம்
சிற்றூர்க் கடை வெளிச்சங்கள் ....
கூடவே.......
நகர்ந்துகொண்டிருந்த
மேகங்களைக் காணோம் ...........
அனிச்சையாய்
வாய் துடைத்து
உறக்கம் மீண்டபோது.

முந்தையநாள் படக்கதையை
சுவாரசியமாய் நிகழ்த்துகையில்
கண் சொக்கும் ஆச்சியிடம்
கோபித்து எழுந்து செல்லும்
பேபியக்கா போல
மேகங்களும்
மீண்டுவரக்கூடும் !

   

6 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முந்தையநாள் படக்கதையை
சுவாரசியமாய் நிகழ்த்துகையில்
கண் சொக்கும் ஆச்சியிடம்
கோபித்து எழுந்து செல்லும்
பேபியக்கா போல
மேகங்களும்
மீண்டுவரக்கூடும் !


"விலகிய சக பயணி"யை வரவேற்போம்..

உமா மோகன் சொன்னது…

முதலில் உங்களை வரவேற்கிறேன் இராஜராஜேஸ்வரி!
நன்றி !

Thenammai Lakshmanan சொன்னது…

அருமை..:)

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி தேனம்மை.தங்கள் வரவு நல்வரவாகுக

கீதமஞ்சரி சொன்னது…

விலகலையும் அழகாய்க் காட்சிப்படுத்திய கவி வரிகளில் சொக்கிப்போனேன். அசத்தல் சக்தி.

உமா மோகன் சொன்னது…

நன்றி கீதா !பல சமயங்களில் விலகல் இருப்பைவிட அழுத்தும் இருப்பு !

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...