செவ்வாய், மார்ச் 06, 2012

வெயில்நதி சிற்றிதழுக்குப் படைப்புகள் அனுப்ப veyilnathi@gmail.com அபி உலகம்-5


  

சரியாகப் படிக்காத
டூடூவின்
காது திருகிவிட்டு
உடனே
தடவிக்கொடுத்தாள் அபி
அம்மாவுக்குப் பாடம்.
*****************************
வண்ணக் குழம்பான
கைகளை ஆட்டி ஆட்டி
அபி பேசிக்கொண்டிருந்தாள்...
வரைந்த சித்திரங்களுக்குப்
பேச்சுப் பயிற்சியாம்...
**************************
பூத்தது ஒற்றைத்தொட்டி
மகிழ்ந்த அபி
நிறைய தொட்டி
வாங்கலாம் என்றாள்.
பரப்பு கருதி
எரிச்சலான அம்மா
நாம எங்க போறது?
என்றாள்..
அதுல ஒரு தொட்டிக்கு ....
அபியின் தலை சாய்ந்த விடையில்
அம்மாவுக்கு
 தானும் அவளும்
இருமலரான உருவம்...தோன்றியது!.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குழந்தைப் படம் சூப்பர் !

உமா மோகன் சொன்னது…

நன்றி தோழர் !

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...