ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

அபி உலகம் -9


நீண்ட கால் முயல்,

சிலிர்க்கும்

பிடறியோடு மான்,
யானை இளைத்து
முழு மஞ்சளில்...
"இப்படியா வரைவாங்க.."
அம்மாவுக்கு அபியின்
பதில் ,
"வரைவாங்ங்களே".....!
கடவுள் ஆதியில்
வரைந்தபோது
யார் சரிபார்த்தது...?
*****************************
தேவதை வேடமாம்
அபிக்கு நாடகத்தில் !
அட்டை சிறகுகளை
அகற்றிவிட்டாலே
போதுமே...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...