புதன், ஏப்ரல் 25, 2012

உடை மாற்றும் கனா

ஏப்ரல் 23  வல்லமை இணைய இதழில் வெளியானது


உப்புக் கரிந்த
உதடுகளோடு
வியர்வையின்
வீச்சம் தாளாது
வேண்டுகிறார்கள்
வெள்ளுடைத் தேவதைகள்…..
சிலுவைகளை விடக் கனமான
சிறகுகளையும்
நடமாடத் தோதிலாது
தடுக்கும் ஆடைகளையும்
புறக்கணித்து
எளிதான புதிய
அவதாரம் எடுக்க வேண்டுமாம்.
யாராவது
கனவு காணுங்கள்…
ஓவியம் கற்றவராயிருந்தால்
கூடுதல் மகிழ்ச்சி!

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

ஹூம்... தேவதைப் பிரச்சனைகளை அலசவும் ஒலிக்கிறதே ஒரு குரல் இங்கே. விரைவில் ஆசிர்வதிக்கப்படலாம் தேவதைகள்.

உமா மோகன் சொன்னது…

ஆம் அந்த நம்பிக்கையில்தான் தேவதைகள் நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...