புதன், ஏப்ரல் 25, 2012

திரியும் பால்


ஏப்ரல் 23  உயிரோசையில் வெளியானது

முகம்..
        உடல்...
முகம்...
       உடல்...
தாவியலையும் விழிகளோடு
வழிதவறிய ஆடுகளை
அனுப்பியவாறு
உன் பார்வை...

தேடும்
சங்கடமணிந்து தொடர்கிறது
என்பார்வை...

சாவியாய்
இறைந்து கிடக்கின்றன
உரையாடலில்
நீ
மற்றும்
நான்
உதிர்த்த சொற்கள்...
                                           

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

தலைப்பிலேயே சர்வமும் அடங்கிவிட்டது சக்தி. தடுமாறும் உணர்வுகளோடு பயணிக்கும் பருவத்தில் தடம்மாறா உறுதியோடு அழகான கவிதை.

உமா மோகன் சொன்னது…

ஆம் கீதமஞ்சரி...கண்ணோடு கண் பொருத்திப் பேச வல்லார் நட்பே
பதமாய் இருக்கும்.நன்றி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...