சனி, ஏப்ரல் 21, 2012

ஒளியின் வீடுகள்

வெளிச்சத்தைவிட
விளக்குகள்
மதிப்பாகிவிடுகின்றன
வெளிச்சம்
விளக்குவழிதான்                                                                    
வரமுடியும் என்றானபோது....
****************************
விளக்குகளை
உருவாக்குகிறவர்கள்
வெளிச்சத்தை
உருவாக்கிட முடிவதில்லை..
****************************
நேற்றிருந்த வெளிச்சம்
விளக்கினுள்
திரும்பாவிடினும்
புதிய வெளிச்சத்தைக்
கூட்டிவரும்
தோழமையுடன்
இருளை வரவேற்கின்றன
விளக்குகள்.
***************************
பழைய விளக்கு
புதிய வெளிச்சம்.

4 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை.

கீதமஞ்சரி சொன்னது…

இருள் விலக்கும் விளக்கின் வெளிச்சம் விளக்கும் விளக்கம் அழகு. விளக்குக்கும் வெளிச்சத்துக்குமான பிணைப்பை வெளிச்சம்போட்டுக் காட்டும் கவிதையும் அழகு. பாராட்டுகள் சக்தி.

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி ராமலக்ஷ்மி .தங்கள் வரவு நல்வரவாகுக

உமா மோகன் சொன்னது…

விளக்கும் வெளிச்சமும் இருள் குறித்த அச்சங்களை விலக்க
வாழ்க்கை ஒளிமயமாவதே நம் வேண்டல் இல்லையா
கீதமஞ்சரி .அன்பான நன்றி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...