புதன், ஏப்ரல் 25, 2012

கனவின் சிறகுகள்



ஏப்ரல்22 கீற்று இணையத்தில் வெளியானது
நிலவின் கீற்றும் 
குளத்தின் சுவாசமும் 
மரங்களின் மௌனமும் 
புதர்களின் சிலிர்ப்பும் 

அவள் 
பின்னிய கரங்களின் 
விடுவிப்புக்காகவோ, 
சிறகுகளின் 
வீழ்ச்சிக்காகவோ...
காத்திருக்கின்றன.
ஒவ்வொன்றாக 
அல்ல ஒட்டுமொத்தமாக 
அகற்றப்படுகையில் 
அவள் 
வெள்ளுடை நனையாது 
சற்றே தூக்கி 
நீரின்மேல் 
நடந்து ...வனம் சேர்வாள்.

2 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

/பின்னிய கரங்களின்
விடுவிப்புக்காகவோ,
சிறகுகளின்
வீழ்ச்சிக்காகவோ...
காத்திருக்கின்றன/

உலகம் அப்படியானதே.

நிச்சயம் வனம் சேருவாள். அருமையான கவிதை.

உமா மோகன் சொன்னது…

பெண்ணின் விடுதலை சில காத்திருப்புகளால் நிராகரிக்கவும்,நிர்ணயிக்கவும் படுகிறது. மிக்க நன்றி ராமலக்ஷ்மி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...