சனி, மே 05, 2012

கரிந்த சொல்

மே  2 அதீதம் இதழில் 

மினுக்கி உதிர்ந்த 
நட்சத்திரம் 
கடைசியாய் 
ஏதோ சொல்ல விழைந்தது….
அதற்காக இறங்குகிறது 
என்றே 
காத்திருந்தேன் நெடுநேரம் ….
ஒளித்துகள் 
இலக்கிலா விலக்கில்
வீழ்ந்திருக்கலாம் போலும்!
நிலா மீதான குற்றச்சாட்டோ ,
இடித்துத் தள்ளிய 
இதர நட்சத்திரம் மீதான 
மனத்தாங்கலோ,
என்னருகே 
சோம்பலாய்ச் சுருண்டிருந்த 
பூனைக்கான கேலிச்சொல்லோ…..
நட்சத்ரா …
என்ன சொல்ல விழைந்தாய்?

2 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக அருமை சக்தி.

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...