திங்கள், மே 07, 2012

பௌர்ணமி எனது நாளல்ல....

தேர்ந்த பாடகியின் 
பழகிய தம்புரா போல் 
பழைய ஜன்னல் 
வளைவு போல்,
புதிய கைப்பிடிச் சுவர் போல் ,
என் 
குட்டித் தலையணை போல்,
பிரபஞ்சப் பயணத்தின்
பிடிமானம் போல் 
பற்றிக்கொள்ளவும் 
சாய்ந்து கொள்ளவும் 
துண்டு நிலாவே 
தோதானது.

4 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக அருமை.

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

ராம்கோபால் சொன்னது…

மிக நன்று. பிறை வானின் புதிய பார்வை அட, போட வைக்கிறது. ஒரு கவிதைக்கு ஓரளவுக்கேனும் சரியா புகைப்படம் போட்டுவந்த நீங்க இப்போ அதிலும் தேறிட்டீங்க!!. வாழ்த்துக்கள். என்னவோ நேற்று இரவு படித்தது, இதோ இக்காலை வரை நீங்க மறுக்கிறது. அது எப்படியோ, ஒரு சில கவிதைகள் மட்டும் அதன் முழு வாக்கியங்களோடு உடனே ம்னதில் புடம்போட்டுவிடுகிறது. இப்போது கேட்டாலும், மனப்பாடமாய்ச் சொல்வேன். வாழ்த்துக்கள். தோழர்.

உமா மோகன் சொன்னது…

நன்றி ராம்கோபால்.ஒருவகையில் நாமெல்லோரும் பிறைநிலாப் பித்தர்கள்தானோ ?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...