புதன், மே 09, 2012

நாற்காலிப்பிசின்

மே 8 கீற்று இணையதளத்தில் வெளியானது 
நான்கு கால்களிருப்பதால் 
என் நாற்காலியும் 
உனதும் ஒன்றல்ல.
உன் நாற்காலியின்                                                  
நான்கு கால்களிலிருந்து 
வேர்பரவி 
நாற்றிசையும் வியாபித்திருப்பதை 
உலகறியும்.
கையிலிருந்து 
நழுவும் பாதரசமாய் 
என் நாற்காலியை 
எனக்கு ஒட்டாமல் 
உருட்ட 
உன்னால் முடியும் என்பாய்.
சுட்டுவிரல் நீட்டி 
என்னுடையதன் 
நான்கு காலும் முறித்து 
அந்தரத்தில் -
இருக்கை மட்டும் 
ஆடவைத்து அச்சுறுத்துவாய்...
இருக்கை அடியில் 
முள்ளோ, குண்டோ,
எனப் பூடகமாய்ப் 
பார்வையால் வெருட்டுவாய்...
இருக்கை 
எனக்கு கௌரவமன்று ..
உன்னை நினைத்தே 
என் கவலை...
வேரோடியிருக்கும் 
நாற்காலியின் கால்கள் 
வேறொருவர் கால்களை 
நோக்க நேர்கையில் ,
உன் இருப்பு.....?

4 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

/இருக்கை
எனக்கு கௌரவமன்று ..
உன்னை நினைத்தே
என் கவலை...
வேரோடியிருக்கும்
நாற்காலியின் கால்கள்
வேறொருவர் கால்களை
நோக்க நேர்கையில் ,
உன் இருப்பு.....?/

மிக அருமை சக்தி.

நல்ல கவிதை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…


"நல்லா இருக்குங்க !"

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி தனபாலன்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...