ஞாயிறு, மே 13, 2012

அம்மாவும் கைபேசியும்

 

குரலின் பலவீனமும் 
வெடிப்பும் மறைத்து 
கோபம் காட்டவும் ,
யார் யாருக்கோ 
யாருக்கோ யாரோ 
அனுப்பிய 
தத்துவ விள்ளலை 
உன் 
நாவிலும் கரைக்கவும் ,
நற்காலை,நல்லிரவு,
பத்திரம் ....
முகமன்களைப் பகிரவும் 
முடியாவிட்டால் போகிறது ...
பச்சை பொத்தான் 
அழுத்தி,
"ஏம்பா சாப்பிட்டியா..."
என நீ 
தொடங்கும் தோறும் 
அறிவியல் வாழ்கிறது 
அம்மா...!

3 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

நெகிழ்வு.

அருமையான கவிதை.

உமா மோகன் சொன்னது…

நன்றி ராமலக்ஷ்மி

ரிஷபன் சொன்னது…

அம்மாவைப் பற்றி யார் எழுதினாலும் மனசையும் வயிற்றையும் தொடுகிறது..

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...