சனி, ஜூன் 16, 2012

மாயச் சலங்கை


ஜூன்15 கீற்று இணையத்தில் வெளியானது 


உதிர்ந்து கிடந்த 
எழுத்துக்களைப் பரிசீலித்துக் 
கொண்டிருந்தேன்...
சலங்கையொலி 
தூரத்தில் தொடங்கியிருந்தது..
நாட்டியக்காரி யாரும் 
நடக்க வாய்ப்பிலாத 
இடமும் பொழுதும் தாண்டி 
என் எழுத்துக்களைச் 
செல்லம் கொஞ்சவிடாமல் 
இம்சித்து நெருங்கியது 
அந்த ஒலி...
பூம்பூம் மாடோ, கிருஷ் வேடதாரியோ ...
சுற்றிவளைத்த ஆர்வத்தினால் 
வாசல் வந்தபோது 
வெறித்த சாலையில் 
மணலாவது கொஞ்சம் கிடந்திருக்கலாம்.
 

6 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக அருமை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை ! வாழ்த்துக்கள் !

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி
திண்டுக்கல் தனபாலன்

பவள சங்கரி சொன்னது…

அருமையான கவிதை உமா மோகன்.வாழ்த்துகள்.

உமா மோகன் சொன்னது…

தங்கள் அன்பான வருகைக்கும் பரிவான வாழ்த்துக்கும் நன்றி நித்திலம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...