வியாழன், செப்டம்பர் 27, 2012

தங்க வேட்டை !



   
மீள் பகிர்வு 



நெற்றிச்சுட்டி
...........................                                     
தோடு ..ஜிமிக்கி ...
மாட்டல் ....,
சங்கிலி ,நெக்லஸ் ...
...........................
.........................
..........................
வளையல் ..மோதிரம் ,
..........................
.........................
.........................
விளம்பரத்தாளை
வைத்துவிட்டு
எழுந்த  தமிழரசி 
காது .மூக்கின் 
வேப்பங்குச்சி மாற்றினாள்ll   lllllllllllllllllllllll
குறிப்பு!
கோடிட்ட இடங்கள்
அவளுக்குப்பெயர்
தெரியா நகைகள் ....

9 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

புகைப்படத்தைத் தொடர்ந்து வந்த சிந்தனை
மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும்
அருமையாகவும் இருக்கிறது
இடைவெளிகள் விட்டதும் அதற்கான விளக்கமும்
மிக மிக அருமை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

யம்மாடி....

தங்க புதையல்...

ராமலக்ஷ்மி சொன்னது…

/கோடிட்ட இடங்கள் அவளுக்குப்பெயர் தெரியா நகைகள் ..../

நல்ல வரிகள்.

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி ரமணி சார்..சிறு இடைவெளிக்குப்பிறகு
வருகை தந்து வாழ்த்தியது மகிழ்ச்சி

உமா மோகன் சொன்னது…

நன்றி தனபாலன் தோழர்

உமா மோகன் சொன்னது…

ரசிப்புக்கு நன்றி ராமலக்ஷ்மி

ஞா கலையரசி சொன்னது…

கோவணம் கட்டிக் கொண்டு பட்டு வேஷ்டி நெய்யும் நெசவாளரின் நிலைமை நினைவுக்கு வந்தது.
பாராட்டுக்கள் உமா!

ஞா கலையரசி சொன்னது…

கோவணம் கட்டிக் கொண்டு பட்டு வேஷ்டி நெய்யும் நெசவாளரின் நிலைமை நினைவுக்கு வந்தது.
பாராட்டுக்கள் உமா!

உமா மோகன் சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி கலையரசி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...