வெள்ளி, டிசம்பர் 07, 2012

"ஆம்பிள சட்டை "



                                   
பிரிய   நடிகை 
காதலன் பிரிவை 
அவன் சட்டை நிரப்புவதாக 
பட்டன் திருகி நின்ற படம் 
அன்று -வினோதம்.
நாகரிகப் பெண்களின் 
தேநீர்ச் சட்டை வாசகங்கள் 
நாவலில் ,
கவர்ச்சிக்கோ,கேலிக்கோ.....

மடித்துவிட்ட

முழுக்கைச் சட்டையோடு வந்து 

பேசினால் -அவள் 

புரட்சிப்பெண் என்பது நம்பிக்கை!
.
பள்ளி நாடகத்தில் 

ஆண்வேட வாய்ப்பை 

அண்ணன் தம்பி உள்ளவளுக்கே 

தருவார் ருக்மிணி டீச்சர்..

எங்கள் வீடு போல், 

பாத்திரம் வாங்க உதவாத 

மாமாவின் கதர்ச் சட்டைகள் 

அத்தைக்குப் பிடித்ததேயில்லை.

யோசனைகளோடு ,

பழைய சட்டைகள் மடிக்கிறேன்-

சேலையின்மேல் அணிந்து 

கல் சுமக்கப்போகும் செல்விக்காகவும்,

நெல் உலர்த்தும் சந்திராவுக்காகவும் .

2 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

சட்டை கூட உழைக்கும் பெண்களுக்கு
கவசமாக இருப்பதில்தான் அதிகப் பெருமை கொள்ளும்
என நினைக்கிறேன்
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்க்கள்

உமா மோகன் சொன்னது…

காலை வணக்கம் ரமணி சார் . நீண்ட நாட்களாச்சு ....,
நன்றி.விகடனில் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு வைத்துள்ளோம் என்று
ஒரு குறுஞ்செய்தி வரைக்கும் போன கவிதை இது..இப்போதான் இரண்டு மாதம்
கடந்தால்னு....ஒரு வரி போடறாங்களே...
அதான் நம் நண்பர்கள் வட்டத்திலாவது தேர்வாகுதான்னு போட்டேன்...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...