ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

அபி உலகம் -12

அபியின் புதிய 
அணிகலன் 
வழக்கம்போல 
பொம்மைப்பெண் காதில்,....
பதறிய அம்மா 
"உலகமே தெரியலியேடி உனக்கு..
எனக் கலங்க ,
ஓடிப் போய் 
தாத்தாவின் புதுக் கண்ணாடியோடு 
வந்தாள் அபி.
"இதப் போட்டுக்கறேம்மா 
இனிமே செரியாயிடும் ......
*********************
 தொண தொவென பேசியபடி 
சுற்றிக் கொண்டிருந்தாள் அபி.
"நானே கவலையா 
இருக்கேன்...தெரியுதா உனக்கு ?
சும்மா இரு...."
...............
இருநொடிக்குப்பின் 
"கவலைன்னா என்னம்மா...?
சும்மா இருந்துவிட்டாள் 
அம்மா.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...