வெள்ளி, பிப்ரவரி 22, 2013

அபி உலகம் -15


வாசல் வேம்பு வந்த கதை...
நீ வளத்தியா தாத்தா...?
தொட்டி ரோஜா 

தன சொப்பு நீரால் வளர்க்கும்
அபியிடம் எப்படிச் சொல்வது...?
"காக்கா போட்ட விதைம்மா..."
ஏன் போட்டுச்சு..?
வேப்பம் பழம் சாப்ப்ட்டுச்சா..அதான்..
அப்போ ஆப்பிள் குடுத்திருக்கலாம்ம்ம்ல ...
ம்ம்ம்ம் விழுந்த
நேரம் தாத்தாவும் நினைத்தார்
ஆப்பிள் மரம் பால்கனியில்
நீட்டும் கனியை...
***********************************
பாட்டியிடம் திருடிய வடையைக்
காகம் தவற விட்டால்
வடைமரம் முளைக்குமா...?

நூடுல்ஸ் எதில் காய்க்கும்..?

சாக்லேட் காயா பழமா...?
அபியின் கேள்விகளுக்கு
விடை அறிந்தால்
தாத்தாவைத் தொடர்பு கொள்ளுங்கள்...



2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... அழகு... அருமை...

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி தோழர்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...