செவ்வாய், பிப்ரவரி 19, 2013

வன தேவதா





பழுத்த இலைகளில்
பாதம்புதைய நடந்துகொண்டிருக்கிறேன் ..
இருள் கவிந்த வனத்தில்
என்றோ கவிந்ததன் எச்சமான
ஒளியின் சாயலில்
நடக்கிறேன்...
செவியுரசும் விழுது ...
வண்ணமோ வடிவமோ
வாழிடமோ காட்டாது
மணத்தால்
உடன் நடந்த பூ..
உணர்ந்தறியாக் குளிர்மையோடு
கால் நனைத்த நீர்ப் பெருக்கு,
தக்க உதாரணங்களோடு
சேகரித்தபடியே நடக்கிறேன்......
மழையுதிரும் மாலையிலோ,
நிலா வழியும் இராமணலிலோ
நாம் நடக்கையில்
கதைக்கத் தோதாக இருக்குமென...


ஒருவேளை.....
ஒளியின் தடம் தீண்டாமலே
என் பயணம் முடியவும் கூடும் ..
நெடுக அழைத்தபடி
நீ வரும் நாளில்
இந்தப் பழுப்புகள்
சருகாய் மொடமொடத்தால்
அதன் வழியே
நீ கேட்கலாம் என் சேகரங்களை.....
.
என் சிறகில் ஒளியிருந்ததைச்
சொல்லி அழாதே தயவுசெய்து
....!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...