சனி, மார்ச் 23, 2013

பொருத்துக!(முடிந்தால்...)





விதைத்து,முளைத்து,
உயர்ந்து,விரிந்து,
இலையுதிர்க்கத் தயாராகும் என்மரம்
இப்போதுதான்
உன்னால் நடப்பட்டிருக்கிறது...

கீற்று கீற்றாய் வளர்ந்து
பாலொளி பரப்பி
தேய்பிறை அச்சத்தோடே
நிற்கும் உன் நிறைமதி
என் வானில்
நித்ய பூரண சந்திரன் குழைத்த குளிர்...

கிழக்கும் மேற்கும்
மாறி மாறிப் பின்னும்
சுழல்கிறது உன் புவியில்..
செங்கதிர்ச் சிரிப்போடு
என் கிழக்கும் 
ஆரஞ்சுப் பந்து உருண்டோடும்
மேற்கும் புடைசூழ்ந்த இருக்கை எனது...

இணையில்லையே ..?
இணை தான் இணையுமா
என்ற லட்சம்கோடி மதிப்பிலான
வினா முற்றத்தில் கிடக்கிறது......

இது பால்வீதியின் மூன்றாவது வீடு !

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...