சனி, மார்ச் 30, 2013

சருகு துளிர்க்கும்



சந்தேகங்கள்
எல்லா நேரங்களிலும்
தீர்ந்துவிடுவதில்லை..


முயற்சிகளில்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றன
ஞான வனத்தின் பழுத்த இலைகள் ...


அவை சருகாகி
அலைக்கழிவதும்,மிதிபடுவதும்
ஆமோதிப்பின் தலையசைப்புகளாய்
மொழிபெயர்க்கப்படுகின்றன ....


அண்ணாந்து கொண்டிருக்கும்
நீ
துளிர் தரிசனத்தில் ...
நான்

சருகைப் பெருக்கியபடி ....

நீரோடை மட்டும்
எப்போதுமே சுழித்தோடுகிறது...
குமிழிடும் வட்டம்
அமிழ்த்திக் கொள்ளும் நாள் வரை
நாம்
சருகோ..தளிரோ...

துளிர்க்கவோ...... உதிரவோ .....


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...