செவ்வாய், மே 14, 2013

பனிக்கட்டி யானை



சமுத்திரத்திரத்தின் அலைகளில்
தவழ்ந்தும் அமிழ்ந்தும்
சமுத்திரம் தேடும் மீன்.


மகரப்பொன் தூளாகப்
பிறவி கொண்டு
மலரின் மணம்
உணரா சுவாசம் .


நிலவின் வெளிவட்டமும்
அதனோரக் கறையுமாக
இருந்தபடி
வளர்பிறை தேய்பிறை
வழிநடை..


கிளையிருக்கும் துளிரும்
விழுந்திருக்கும் சருகும்
ஒன்றாய் சரசரக்கிறதென்று
சொல்ல உனக்கு எங்ஙனம்
வாய்த்தது ....

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

வாழ்த்துக்கள்...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...