ஞாயிறு, மே 05, 2013

என் கடன்

மெல்லக் கால் நனைத்துக்
குதித்துக் கும்மாளமிட்டு
வெளுத்த பாதங்களுடன்
மனமின்றி
நாளைய நனைதல் நினைவுகளுடன்
கரையேற்றி அனுப்பிய
நுரைமிதக்கும் நதி -இன்று
வற்றி மெலிந்த ஒற்றைத்தட
சிற்றோடை...


நாளை நான் வருகையில்
கான்க்ரீட் பொந்து தள்ளும்
கழிவு நீரருவி வழிய வழிய
சாக்கடையோரக் கொசு
விரட்டியபடி விரையலாம்...


ம்ம் ....
மறக்காமல் வாங்க வேண்டும்
தண்ணீரின் தேவை குறித்த
புதிய நூல்..
கடக்காமல் பகிரவேண்டும்
முகநூலின்
தண்ணீர் தகவல்களை

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தண்ணீர் தகவல்களா...? கண்ணீர் தகவல்களா...?

ராமலக்ஷ்மி சொன்னது…

சோகம்.

நல்ல கவிதை.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...