புதன், மே 08, 2013

மலர்வது.... முள்ளா ?




ஆன்மாவின் சிறகுகளுக்கு
வண்ணம் பூசுவது
வழக்கம் இல்லைஎன்கிறாய் 


அம்புகளின் நுனியிலும்
மலரிணைத்தே விடுப்பவள் நான்..


துப்பும் நிறத்தையே
அடையாளமாக அணிந்திடும்
மொட்டுகளுக்கு
குழப்பம் தருவதே
உன் வழக்கமாகிவிட்டது...


உன்,என்,
வழக்கங்களை மீறியும்
சிரிக்கிறது பூ...
கூடவே அதன் முள்ளும்...

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

///கூடவே அதன் முள்ளும்... ///

அருமை...

G.M Balasubramaniam சொன்னது…


/ கூடவே அதன் முள்ளும்/ மட்டுமல்ல என் விளங்காமையும். ஆன்மாவின் சிறகு, துப்பும் நிறம் வழக்கம் எல்லாம் எனக்குக் குழப்பமாகி விட்டது. மன்னிக்கவும்.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...