புதன், ஜூன் 12, 2013

என் தொடக்கமும் தொடர்ச்சியும்


ஒளியைக் கிள்ளி
உதட்டில் பொருத்திக் கொண்ட
அந்தக் கணத்திலேயே
உன் கண்களில்
தீச் சுரந்தது
எனக்குத் தெரியும் ...!



இருள்
உன்னை அவித்துவிடும்
என மனப்பாடம்
சொல்லித் தந்தாய்...
எனக்கு மையிட்டுக் கொள்ள
அதைக் கைப்பற்றினேன் ....


திரைச் சீலைகளின்
பின்னிருந்து பேச மறுத்து
அவற்றையும்
சேர்த்துச் சுமந்தபடி
சுழன்றாடும் என்
பாத சரங்கள் உன்மேல்
விழும் இடித் துண்டுகள்
எனக் கதைக்கிறது
நூற்றாண்டுகள் கடந்த உன்
துர்க்கனவின் பாடல்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான சிந்தனை வரிகள்... படமும்...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...