செவ்வாய், டிசம்பர் 17, 2013

துளிகளாலான வாழ்க்கை

மஹாகவிதை இதழில் வெளியானது 
***********************************
மகிழ்வின் கோப்பையை நிரப்பும் 
பொறுப்பு உன்னுடையது.
துளியாய்ச் சொட்டுவதா ...
சட்டென்று சரித்து நிரப்புவதா ....
சிந்தினால் மதிப்பெண் குறையுமா...
நிதான...மா....க...அலகு  அலகாக
இட்டு-அலங்காரமாக 
ஒரு பழநறுக்கோ ...இலைக்கீற்றோ
செருகுவதா ....
சிந்தித்.. த..வண்.. ண.. மே 
நிற்கிறாய்...
அவகாசத்தின் அளவு 
சொல்லப்படவில்லை என்ற முனகலோடு ..
உன் கால் கடுக்கும் 
என்ற கரிசனத்தோடு யாரேனும் 
ஒரு இருக்கையில் 
உன்னை அழுத்திவிடவும் கூடும்...
அங்கேதான் யாரிடமோ இருக்கிறது 
நேரமானி...
ஓசையின்றி நகர்ந்துகொண்டிருக்கும் 
டிஜிட்டல் எண்கள் வெற்று அடையாளமல்ல ...

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிந்தனை அருமை சகோதரி…

வாழ்த்துக்கள்…

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...