ஞாயிறு, ஜூலை 20, 2014

பிட்சாந்தேஹி


கவனம்பதியாப் 
பாடலின் நடுவிலும் 
ஒற்றை வயலின் இழுப்பில் 
உயிர் துளிர்க்க வைப்பவன் 

பெயரறியாத் தெய்வத்திற்காக
சம்பங்கிப் பூக்களை 
நெருக்கித் தொடுத்துக் காத்திருப்பவன் 

மலிவுவிலைத் துப்பட்டாவிலும் 
கவின் சித்திரம் பதித்தவன் 

நாற்பது ரூபாய்த் துண்டுப் பாவாடை 
நாலுமுழம் அரளியிலும் 
உங்கள் வேண்டுதல்களுக்காகக் 
தேவியை 
ஆவாஹனம் செய்துவைப்பவன் 

நிமிடங்களில் கடக்க இயலாமல் 
நாசிமூடி நகரும் 
தெருமுனையில் 
நாள்முழுதும் நின்றபடி 
திடமானதொரு தேநீர் கலப்பவன்  

யாரோ வாங்கவோ,
புறக்கணிக்கவோ போகும்,
பழச்சுளைகளின் மேல் கவனமாக 
பாலிதீன் போர்த்துபவன் .....

நம்பிக்கையுடன் வாழ 
இன்னும் இருக்கிறது உலகம் 

23 7 14 ஆனந்தவிகடனில் வெளியான கவிதை 

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அழகு கவி கண்டு மகிழ்ந்தேன்.
ஆனந்த விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...