திங்கள், பிப்ரவரி 23, 2015

சமீபத்திய கவிதைகள் -2

அந்தக் குறுவாள்
உன்னுடையதா...
என்னுடையதா....
*********************************
இந்த நொடிமட்டும்தான்
கைவசம் என்றேன் 
அதற்கும் 
கைநீளும் என்பதறியாமல்
***************************************
அந்த வீதியின் 
மகிழம்பூக்கள் 
நினைவில் காய்ந்து கொண்டு....
நடத்தல் சாத்தியமில்லை
*********************************
நான் கேட்டதும் 
நீ கேட்டதும் 
ஒரே பாடல் என்றாலும் 
ஒரே பாடல் இல்லை*
*****************************************
வீடு பூட்டும் கவலை 
ஏதுமின்றி 
தேர் ஏறிவிட்ட சுவாமி 
காத்திருக்கிறார்
*****************************
இக்கணத்தின் கைப்பு 
மறக்க 
அக்கணம் வேண்டியிருக்கிறது 
அக்கணமும் 
கைப்பு தளும்பியது 
இக்கணம் உறைக்கவில்லை.
இக்கணமும் அக்கணம் ஆகலாம்

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...