திங்கள், மார்ச் 16, 2015

தெப்பக்கட்டை

தெப்பம் சுற்றிவந்து கொண்டிருந்தது 
ஒரு பஞ்சுமிட்டாயோடு 
திருப்தி அடையாச் சிறுவர்களின் .,
பார்த்தே நிறைந்த கடைகளைப் 
பிரியப்போகும் சிறுமியரின்., 
வழமையான குழப்பங்களைத் துறந்த
நாட்கள் முடிகிறதே என
தீபாவளிச் சேலையால்
முகம் துடைத்தபடி நகரும் பெண்டுகளின்
மனமே
தன் தெப்பக்கட்டை
என பூச்சரம் ஆட ஆட
...............................................
தெப்பத்தில் அம்பிகையும்
சற்றே கண் கலங்கினாற்போலத்தான் .....

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அட...அட...சொல்ல வார்த்தைகள் இல்லை.. சொல்லியவிதம் கலக்கல் பகிர்வுக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...