புதன், மே 13, 2015

சாமியின் ஆட்டம்

ஒன்றுமறியாப் பருவத்தின்
விளையாட்டு அது
பாசி மிதக்கப் படிக்கட்டு மூழ்கி
குளம் தளும்புகையில்
எட்டுபடி எங்க போச்சு
சாமி வந்து தின்னு போச்சு ...
வற்றி வற்றி ஒருநாள்
வரிசை பெருகும்போது
எட்டுபடி எங்க வந்துச்சு
சாமி வந்து துப்பி போச்சு ....
தின்னுவதும் துப்புவதுமாய் இருந்த
சாமியின் ஆட்டத்தில்
கரையும் முழுங்கி
தரையும் முழுங்கித்
தண்ணீரும் முழுங்க
வந்தவனுக்கு
சாமி என்றே பெயர் வைத்திருந்தார்கள்
அவன் துப்பியதெல்லாம்
பான் பொட்டல எச்சில் மட்டுமே

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

அருமையாக சொல்லியுள்ளீர்கள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...