திங்கள், ஜூன் 29, 2015

முகநூல் கவிதைகள் சில

வனமாக விரும்பிய விதைக்கு 
பழைய போத்தல் நிலமானது 
யார் வகுத்த விதி

********************************************
அந்த மேகம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது
காக்கை,கழுகு,என் அபிமான நேசன்
என
யார்யாரையோ கண்டுகொண்டிருக்கிறேன் 
மேகத்தையும்
உணர்கிறேனா என உணராமலே
அந்த மேகம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது
அதை மேகம் என்று சொல்வதும் கூட
அறியாது
அந்த மேகம் ....
***************************************************
முகமூடிக்குப் பின்னால் இருப்பதும் 
முகம் இல்லையா
*******************************************
அதிகாலை நான்கு மணிக்குத்தான் 
குயில் கூவும் 
இது என்ன கடிகாரம் 
நான்கு மணியே இல்லாமல் 
*************************************************
தூரத்து ஒற்றை இருக்கை
தந்த நம்பிக்கை 
இரைத்தமூச்சையும் பொருட்படுத்தவில்லை 
நொடித்த கால்கள் 
தெரிந்துவிடாமல் 
தூரத்திலேயே இருக்கட்டும்
************************************************
கனவு என்று சொல்
கற்பிதம் என்று சொல்
அறியாமை என்று சொல்
பேராசை என்று சொல்
பிச்சி என்று சொல் 
பிழை என்று சொல்
பொய் என்று...
************************************************
வண்ணங்களைக் குழைத்தபோது 
தோன்றியதெல்லாம் ஓவியம்தான் 
கை அழுக்காகும் 
என 
முடிந்தபோதுதான் தெரிகிறது
*****************************************
நன்றாகத்தான் பேசுகிறீர்கள் 
நம்பிக்கையைப் பற்றி 
கைப்பையை 
இறுகப்பிடித்தபடி
******************************************
தொடுத்ததும் விடுத்ததும் 
சூடியதும் 
சூட்டியதும் 
உதிர்ந்ததும் பறித்ததும் 
அதே பூதான்
**********************************
நாய் நினைத்தது
மறந்தது
நாயையும் மறக்காமல்
நாய் நினைத்ததையும் மறக்காமல் 
ஒரு பிழைப்பு

படம்-ராஜி சுவாமிநாதன்

வாழ்க்கைச் சத்தம்


என்ன செய்துவிட்டோமென
பேசிக் கொண்டிருப்பது
என்ன நடக்கவில்லையென 
மௌனமாயிருப்பது
ஆனாலும்
மௌனமாயிருந்தபடி
பேசிக்கொண்டும்
பேசியபடியே
மௌனமாகவும்
இரைகிறது வாழ்க்கை

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...