புதன், ஆகஸ்ட் 05, 2015

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்



குறுக்கே முளைத்த 
"............. ஜுவல்லரி"பலகையின் 
வளர்ச்சி  புரியவேயில்லை 
உழவு நடக்கா வயலில் 
ஒதுங்கி முளைத்திருந்த 
காட்டாமணிப் புதருக்கு....
************************************************
கண்ணுக்கெட்டியவரை 
கல்வளர்ந்த நகரின் நடுவே 
எங்கிருக்கிறதோ 
எங்கள் பத்தாயத்தின் கல்லறை 

இருந்த போதாவது சாலையோரம் 
இருந்திருக்கலாம் 
எங்கள் நிலம் 
கூட நாலு காசு தேற்றவும் 
இங்கேதான் இருந்தது 
எனச் சந்ததியிடம் காட்டவும்...
***********************************************
எங்களைப்போல் 
நீங்களும் இருந்துவிடாதீர்கள் 
உங்கள் வயலில்,தோப்பில்,கொல்லையில் 
நின்று 
படம் எடுத்துக் கொண்டுவிடுங்கள் 
குறைந்தபட்சம் செல்பி ..
வரலாறு முக்கியம் 
*****************************************
அக்டோபரில் வேண்டுமானாலும் 
தமிழ்ப் புத்தாண்டு பிறக்கட்டும் 
பச்சடி வைக்க வருடம் முழுதும் 
மாங்காய் கிடைக்கிறது 
பழமுதிர் சோலைகளில் 
**********************************

1 கருத்து:

கொளக்குடிமாறன் சொன்னது…

இந்த கற்காடுகள் எடுத்துரைப்பது
நாகரீகத்தின் வளர்ச்சியும்
உறவுகளின் வீழ்ச்சியும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...