சனி, அக்டோபர் 24, 2015

தாய்க் குலத்தின் பேராதரவுடன் ....

பாத்திரம் பண்டமெல்லாம்
பார்த்துப் பார்த்து தேய்த்து
கூடுதலாக மேலிருந்தும் எடுத்து
தேய்த்து (பொறுப்பான மருமகள் )
வந்ததும் சாப்பிடத் தோதாக
சமையல் முடித்து வைத்து
வராதவர் மனங்கோணாதவாறு
தின்ன எடுத்துவைத்து
இடையில் சூடிச்  செல்ல
உதிரி மல்லி கனகாம்பரம் தொடுத்து
பரபரக்கும் வேலை நடுவே
நீ வரியா நீ வரியா
ஆள் சேர்த்து
சென்றுவந்தவளிடம் கதைகேட்டபடியே
ஆட்டுக்கல் தெறிக்க தெறிக்க
மாவரைத்து வழித்து
வியர்வையை வழித்தெறிந்து
தீபாவளி புடவைக்கு மாறி
வீட்டுப்பாடவிசாரணையும் இன்றி
நண்டுசிண்டுகளையும் இழுத்தபடி
காட்சிதோறும்
விரைந்தவர் கண்ணீரும் புன்னகையுமே
உங்கள் வெள்ளிவிழா பொன்விழாக்கள்

எங்கள் கதாநாயகிகளுக்கு
இப்போ
நிறைய வேலையிருக்கு பாஸ்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...