வெள்ளி, நவம்பர் 20, 2015

முகநூல் துளிகள் 2

ஆகப்பெரும் சித்ரவதை
அதை
சொல்லாதிருக்கக் கடவது
அதனினும் பெரிது

*********************************************

பொய்மையின் துளிரும்
அதே
செம்மையோடுதான் அசைகிறது
வேண்டுமென்றால் நினைத்துக்கொள்
நாணம் என
********************************************

நிலாவையும்
இடுங்கிய கண்ணோடுதான் பார்க்கிறாய்
பாவம் வெளிச்சத்துக்கு ஒடுங்கியபிழைப்பு

*************************************************

உரசியபடியே 
வீழ்கிறது சருகு 
தளிர் தடவி ஆடுகிறது காற்று
**********************************************

பேசாதிரு
பாற்பற்களைப்போல்
ஆசையாய்ப் புதைக்கமுடியவில்லை
விழும்சொற்களை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...