ஞாயிறு, நவம்பர் 08, 2015

குடை என்ற குறியீடு

மழை என்னை விரி என்றது
இருள் என்னை விளி என்றது
நான் முந்தி
நீ முந்தி
ஒரு துயரப்பாடலை
இடை நிறுத்திவிட்டு திடீரென
பெருங்குரலெடுக்கிறது காற்று
முகம் தெரியாதிருப்பதை எண்ணி
சிலிர்த்துக் கொள்கிறது
வேலியோரச் சிறுகொடி
பற்றிக்கொள்ளாமல் விட்டுவிட்ட
குடை
ஆனந்தமாகத் தாவிவட்டமிட்டு
தலைகீழாக மிதக்கிறது
அந்தக்குடைக்குவண்ணமில்லை
மின்னல் அது குடைஎனச் சொல்லியது
அவ்வளவே
உரிமைகோராசுதந்திரத்தின் கீற்று
அத்துணைஅழகாய்இருந்தது
யாரும்எனதென்று
சொல்லிவிடும்முன் நகர்ந்துவிடல்நலம்
நானோ
குடையோ

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...