புதன், ஜனவரி 06, 2016

டிசம்பர் பூக்கள்-4

ஏற்றிவந்த சுடர்
அகத்திருக்கிறது 
இருள் 
இருள் என 
அச்சம் கொள்ளாதே
*************************
ஆங்காரமும் அன்புதானாம் 
நன்றாகத்தான் இருக்கிறது 
இந்த 
மொழிபெயர்ப்பு
**********************************
ஒவ்வொரு மரணத்தின்
பின்னும்
உறவு பேணுதல்
குறித்த ஞானோதயங்களும் தீர்மானங்களும் பிறக்கின்றன
உயிர் வாழ்பவர்களால்
மரணிக்கின்றன

**************************************
தெரியும் என்ற இருப்பு
தெரியாததன் நெருப்பில்
நீர் தெளித்து
அவித்துக் கொண்டிருக்கிறது

*****************************
பழுத்த கம்பி 
நீ தொட்டாலும் சுடும் 
கனலின் அடையாளம் 
கற்றல் அவசியம்


************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...