புதன், மார்ச் 30, 2016

ஏதிலி நிலா

பாசிநிறஅலைகள் 
பேரமைதி தளும்பிக்கிடந்த
நதியோரம்
அடியாழத்திலிருந்து
ஒரு கை நீண்டுயர்ந்து
பாசி விலக்கிச்சிரிக்கலாம்
அலை புரளலாம்
ஏதுமின்றி
இம்முழு நிலவை 

வேறிடம் போகச்சொல்கிறது காற்று
முகம்சுண்டி அடுத்த வாசல்
நகர்ந்த ஏதிலிப்பெண்ணும்
நிலாமகள் போலவே
இறுகிய முகம்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...