புதன், மார்ச் 30, 2016

மார்ச் பூக்கள்

ஒளிச்சுடர் என்னைக்கடந்து செல்கிறது ஆரஞ்சு தளும்ப
மஞ்சள் மின்னலை 
எதிர்நோக்கிய கண்களோ
பாதையில் அலைபாய்கின்றன
******************************************
குவிந்த கரங்களுக்குள்
பொன்வண்டு 
சிறகடிப்பதை நிறுத்தாது
தீப்பெட்டி சதமில்லை 
சிறகுக்கு
சொல்லிக் கொண்டுதான்
இருக்கிறேன்
உயர்ரக தினை மற்றும்
கத்தரி என்வசமுண்டு என

**************************************
வெயில் இறங்கி இறங்கி 
முற்றத்தையும்
வாசலையும் விட்டு 
வெளியேறி 
தெருவின் அடியில்
படுத்துக்கொள்ளத்தானே
போகிறது.
அதை நினைத்து
துடைத்திடு
வியர்வை அல்லது கண்ணீர்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...