புதன், ஜூலை 06, 2016

ஜூன்-9 முகநூலில்

நீண்டநேரமாக
அசையாதிருந்த வளர்வேம்பு
சற்றே குனிந்து குழைகிறது
இறுக்கம் தாளா பெருமூச்சு
*************************************************
கண்ணுக்கெட்டிய தூரம் பறந்து கொண்டேயிருக்கிறது
அச்சிறு பறவை
என் காலால் கணக்கிட்ட
களைப்பின் தொலைவை
அறியாது
***********************************************
இலைகளையெல்லாம்
உதிரவிட்டு
குச்சி குச்சியாக நிற்கும்
கிளை
வெளிச்சம் விழுங்கிக்
கொண்டது
தண்டு பிடித்து உலுக்கிய
பிள்ளைக் கூட்டத்திடம்
புகார் ஏதுமின்றி

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...